ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

அமாவாசை நிலவொளி!

விடிவெள்ளிக்குத் துணையாய் விடியும் வரை விளக்கெரிய
குமுத இதழ்கள் குமுதம் படித்தனவோ - கார்வண்டுக் கண்களவை
வெள்ளித் திரையில் இலயித்தனவோ யாரறிவார்!
அடுத்த மாதப் பரீட்சையோ அக்காள் மகளிடம் வாஞ்சையோ
அதரம் உதிர்த்த அழகியதோர் ராகமோ - ஒப்பற்ற அழகியுந்தன்
அறையில் கூட விளக்கெரிய நான் மட்டும் இருளில்!
அமாவாசை நிலவொளியில் அந்தரங்கமாய்ச் சொன்னதை
அகமகிழ நேரே சொல் அடுத்த கணம் அங்கிருப்பேன் - இரகசியமாய்க் காதலித்த
அல்லல் நீங்கி அருள் பெறுவேன்!