வியாழன், 24 ஆகஸ்ட், 2017

மனசாட்சி

பேசாத சொற்களின் அர்த்தம்
நீ மட்டும் உணர்ந்திடுவாய்  நித்தம்
காண்பதே கடினம் என்றாலும்
காணும் காட்சியெல்லாம் உந்தன் கோலம்
நித்திரையில் வேற்றுலகம் காண்பித்தாய்
நீளும் நாட்களிலே சிந்தை நிறைத்திட்டாய்
எனை விடவும் என்னை நீ நன்கறிந்து
நான் என்றால் நீயும் என்றாகிவிட்டாய்