வியாழன், 28 மார்ச், 2013

அருமை மகளுக்கு...

அழுகைச் சுரத்தில் ஆனந்தம் உணர்த்தும் ஓர் அதிசயப்பிறவி நீ;
கழிவறையென என் கால்ச்சட்டை நனைக்கும் என் செல்லக் கண்மணி;
உறங்கும் தருணமும் உள்ளம் கவரும் என் அழகிய மின்மினி;
உருவத்தில் எனை ஒத்து சருமத்தில் மலரொத்த ரோஜா இதழும் நீ;
பிறந்தே என் பிறப்புக்கு முழுமையும் தந்த நற்பிரம்மனின் சிற்பம் நீ;
இனி எந்தன் கனவிலும் நினைவிலும் உறையும் என் இருதயத் துடிப்பும் நீ!