வெள்ளி, 2 அக்டோபர், 2009

அலையின் அனுபவம்

கரை தொட்டுக் கண நேரம் கண்ணயர
திரை கடலில் மன்றாடி நான் தவிக்க
கரை நின்ற காதலன் காதலியைக் கொஞ்சக்கேட்டேன்
தன் காதல் எனைப் போல் விடா முயற்சி கொண்டதாம்...

ஓடியது ஓடி வலுவும் வழிந்தோடி
உருவிழந்து தவித்து சோர்ந்து நான் சாய
சுனாமி வருவதாய் எச்சரித்தான் விஞ்ஞானி
விலகும் நீர் வெகுண்டு வெள்ளமாய் மாறுமாம்...

அடி மேல் அடிபட்டு அடி சிதைந்து
நுரைகளாய் வெடித்து நான் வெம்பிச் சிதற
மண் வீடு கட்டிய மழலை சிரித்தாள்
கண்ணீர்த் தடத்தில் ஓர் கனவுக்கோட்டை...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக