புதன், 18 பிப்ரவரி, 2009

தமிழ் தந்தருள்வாய்...

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ்மூன்றுந் தா


இறை வாழ்த்துடன் படைப்புகளை தொடங்குவது நமது பண்பாட்டில் ஊறிய ஒரு விஷயம். இதோ... எனது பிரார்த்தனைகளை வினை தீர்க்கும் விநாயகனிடம் சமர்பித்து விட்டேன்... தடைகள் நீங்கட்டும்... தமிழ் வெல்லட்டும்...

2 கருத்துகள்: