வியாழன், 19 பிப்ரவரி, 2009

வல்லுனன்

வரவுகளின் பால் காதல் கொண்டு
உறவுகளின் அருமை மறந்து - உடல்
நலம் கெடுத்து, புறம் பெருத்து
தலம் மறந்து வாழ்பவன் வல்லுனனோ!

பொன் செய் மனத்துடை அகமகிழ்ந்து
தன் சுற்றம் கிட்டமர்த்தி - மகிழ்ச்சி
பொங்கும் வாழ்வுடை மாந்தன் இழியவனோ
தங்கும் உயிரற்ற காகிதம் அளவிற்குறைந்ததால்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக