வியாழன், 19 பிப்ரவரி, 2009

கடற்கரை

அலை நனைத்த கடற்கரையில்
அகம் தொலைத்து நடை தொடர்ந்தேன்...
கால்கள் இரண்டே ஆயினும்
அவை எனதே ஆயினும்
வண்ணத்து பூச்சி கொண்ட
வண்ண திட்டுக்களென தடங்கள்!
ஒரு பூச்சி இறகுறைந்தும்
ஒவ்வொன்றும் ஓர் கவிதை
சோகத்தில் சொந்தங்கள் சிரித்த அடி
மகிழ்ச்சியில் நடை மறந்த அடி
மங்கையர் பார்க்க மன்மதனென ஓரடி
பரபரப்பில் எனை மறந்த நூறடி
அடி மேல் அடி தொடர்ந்தும்
அடி மேல் அடி வைத்தேன்
அலை நனைத்த கடற்கரையில்
அகம் தொலைத்து நடை தொடர்ந்தேன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக