வியாழன், 19 பிப்ரவரி, 2009

பனிப்பெண்ணே வருக!

தூய்மையின் இலக்கணமே தூய வெண்பனித்துளியே
சில்லிடும் சித்திரமே சிலிர்க்கும் நீரோவியமே
மௌனமாய் பொழிபவளே மென்மையின் மறுபெயரே
ஆண்டிரண்டு காக்கவைத்து அரவணைத்த அதிசயமே
உன்னிடத்தில் நானும் என்னிடத்தில் நீயும்
உணர்வில் குளிர்ச்சி உடம்பிலோ குளிர்
நீயிருக்கும் இடமறிந்தும் மெய்வருடும் நொடியறிந்தும்
உனை நாட மனமில்லை நடுங்குமெனுடலுக்கு
வெள்ளிச்சிதறலே வெப்பமறுத்துக்கொல்பவளே
மனதிற்கினியவளே மந்தம் புகுப்பவளே
மாயக்கண்ணனவன் மனதிலென்ன கொண்டானோ
மதுரமும் விஷமும் எதிலும் உண்டென்றானோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக