வியாழன், 19 பிப்ரவரி, 2009

தனிமைக்கவிதை

கவி படைக்க அமைதி தேடி
மனித வாடை முற்றும் மறந்து
அமைதி தனையே அணியாய் பூண்டு
சிந்தனைக்கு வடிவளித்து சிற்பமாக்க முனைந்தேன்...

ஜகத்தின் அமைதிக்குஞ்சேர்த்து அகத்தின் ஓலமொலிக்க
அர்த்தமற்று வாழும் எனைக்கண்டது நகைக்க
விதேசத்திலமர்ந்து விண்ணை வெறித்த கண்களுள்
பூமிப்பந்தின் மறுபுறமிருக்கும் தாயுந்தாய் நாடும்...

தாக்கத்தை வெளிப்படுத்த தன்னந்தனியே வந்தமர்ந்து
தனிமையுணர்ந்து தனிமயாலேயே தாக்கப்பட்டுத்திரும்புகையில்
கவியெழுதும் முயற்சி வெல்லத்தான் செய்ததுகண்ணீர்த்துளிகள் மைத்துளிகளாய்... கண்ணீர்ச்சிதரல்கள் கவிதைகளாய்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக